Home தாயகச் செய்திகள் சுமண தேரரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சுமண தேரரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!

Share
Share

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கையடக்க தொலைபேசி சமிஞ்சைகளை அடிப்படையாகக் கொண்டு அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மட்டக்களப்பு நீதவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்துரைத்த மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்தன தேரர், இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.

வன்முறையை ஏற்படுத்தும் வகையில் கருத்துரைத்தமைக்கு எதிராக, சட்டத்தரணி தனுக்க ரனஞ்சக என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாடு தொடர்பிலேயே சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...