Home தாயகச் செய்திகள் சித்துபாத்தி புதைகுழியில் பொம்மையும் மீட்பு! எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தி புதைகுழியில் பொம்மையும் மீட்பு! எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது!

Share
Share

அரியாலை – சித்துப்பாத்தி (செம்மணி அருகே) மனிதப் புதைகுழி அகழ்வில் நேற்றைய தினம் பொம்மை ஒன்றும் சிறுவருக்கான காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் சில எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அரியாலை மனிதப்புதைகுழியில் இரண்டாம் கட்டமாக ஆறாவது நாளாகவும் நேற்றைய தினம் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது, கடந்த ஞாயிற்றுக் கிழமை அடையாளம் காணப்பட்ட புத்தகப்பை என்று நம்பப்படும் நீல நிறபை மீட்கப்பட்டது. இதன் கீழ் பொம்மை ஒன்றும் Bata என்று பொறியிடப்பட்ட சிறுவருக்கான காலணி ஒன்றும் மீட்கப்பட்டன.

மேலும், தொடர்ந்த அகழ்வில் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அவை சிக்கலான நிலையில் காணப்படுவதால் அவற்றின் எண்ணிக்கையை நிபுணர்களால் கணிப்பிட முடியவில்லை. மீட்கப்பட்ட பின்னரே சரியான எண்ணிக்கையை கூறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேசமயம், கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை செம்மணி அகழ்வில் 33 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினமும் அகழ்வுப்பணி தொடரவுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...