Home தாயகச் செய்திகள் சட்டவிரோத மருந்து, அழகுசாதனப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மன்னாரில் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சட்டவிரோத மருந்து, அழகுசாதனப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மன்னாரில் கைது!

Share
Share

நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மருந்துகள், அழகு சாதனப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மன்னார் – கீரி கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 56 ஆயிரத்து 870 மருந்து மாத்திரைகள், அழகு சாதனப் பொருட்களும் இதன் போது கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர் தாழ்வுபாடு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட மருந்துகள், அழகு சாதனப் பொருட்களுடன் சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினரால் யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...