Home தாயகச் செய்திகள் கிளிநொச்சியில் அதிகாலை விபத்து! இருவர் பலி!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கிளிநொச்சியில் அதிகாலை விபத்து! இருவர் பலி!

Share
Share

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரேலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையம் முன்பாக இருந்த பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, பின்னால் வந்த டிப்பர் லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

அதனைத் தொடர்ந்து டிப்பர் வாகனத்திற்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றையவர் படுகாயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...