Home தென்னிலங்கைச் செய்திகள் ஊழல் எதிர்ப்புக் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு உதறல் – அமைச்சர் நளிந்த!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஊழல் எதிர்ப்புக் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு உதறல் – அமைச்சர் நளிந்த!

Share
Share

தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையால் எதிர்க்கட்சிகளுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“சில ஒன்றிணைவுகள் அச்சம் காரணமாகவே ஏற்படுகின்றன. பாதாளக் குழு உறுப்பினர் கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரை இந்தோனேசியாவில் வைத்து நாங்கள் கைது செய்தபோது, அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கவில்லை. மாறாக, கைது பயத்தில் ‘பெக்கோ சமன்’ என்பவரின் வீட்டுக்குச் சென்று ஒளிந்திருந்தனர்.

இதனால் அனைவரையும் கூண்டோடு கைது செய்வதற்கு பொலிஸாரால் முடிந்தது. அவர்களுக்கு ஏற்பட்ட அச்சம்தான் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றுகூட வைத்தது.
அவ்வாறுதான் எதிர்க்கட்சிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த அச்சத்தால்தான் எதிர்க்கட்சியினர் ஓரணியில் இணைந்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு ஒடுக்க வேண்டிய நோக்கமும் – தேவையும் எமக்கில்லை. ஆனால், எத்தனை தரப்புகள் ஒன்றாக இணைந்தாலும், சட்டம் நடைமுறையாகியே தீரும் – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரியிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில தெரிவிப்பு!

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...

யாழில் 14 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம்...