Home தென்னிலங்கைச் செய்திகள் உலக முயற்சியாளர் தினத்தையொட்டி வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

உலக முயற்சியாளர் தினத்தையொட்டி வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி

Share
Share

உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா பல்கலைக்கழகத்தின் முயற்சியாண்மை கற்கைகள் பிரிவின் மாணவர்கள் இணைந்து இன்று சனிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.

இலங்கையின் முயற்சியாளர்களின் பொருளாதார மேம்பாடு இலங்கைக்கு முக்கியமான ஒரு விடயமாகக் கருத்தில் கொண்டு உலக முயற்சியாளர் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வவுனியா பல்கலைக்கழகத்தில் புத்தாக்கம் வர்த்தகக் கண்காட்சி மற்றும் வர்த்தகச் செயற்பாடுகள் தொடர்பான கருத்தரங்குகள் இடம்பெறுகின்ற நிலையிலேயே இந்த விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் பூங்கா வீதியில் உள்ள வெளிவாரிகள் கற்கைகள் பிரிவில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் வவுனியா நகர் வழியாகச் சென்று மீண்டும் வெளிவாரி கற்கைககள் பீடத்தை வந்தடைந்ததது.

இதன்போது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அ.அற்புதராஜா, வியாபாரக் கற்கைகள் பீட விரிவுரையாளர்கள் மாணவர்கள் உட்படப்  பலரும் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...