Home தென்னிலங்கைச் செய்திகள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; விசாரணைத் தகவல்களை வெளியிடக்கூடாது – நீதி அமைச்சர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; விசாரணைத் தகவல்களை வெளியிடக்கூடாது – நீதி அமைச்சர்!

Share
Share

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணை தொடர்பில் எந்தவித தகவல்களும் வெளியிடப்படக்கூடாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால், அது தொடர்பான தகவல்களை வெளியிடுவது, விசாரணைக்கு பாதகமாக அமையும் என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, குறித்த விசாரணை தொடர்பாக தகவல்களை வெளியிடுவது தொடர்பில் நாடாளுமன்றமும் உத்தரவுகளை வழங்க கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரியபோதே, நீதி அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

தகவல்களை பகிரங்கப்படுத்துவதால், விசாரணைகள் சீர்குலையக்கூடும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...