Home தாயகச் செய்திகள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

Share
Share

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும் விவசாயிகளும் இணைந்து நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தனிநபர் ஒருவரால் கடந்த இரண்டு வாரங்களாக பிரதேச மக்களுக்கு சொந்தமான வயல் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உப்பளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கடல் நீர் பம்பிகளின் மூலம் பாத்திகளுக்குள் செலுத்தப்படும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர்கள் கூறினர்.

இந்த உப்பளம் அமைக்கப்பட்டால் கொக்கிளாய் கடல் நீரேரியில் உள்ள மீன்வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றியுள்ள வயல் நிலங்களும் உவர்நிலமாக மாறும் அபாயம் இருப்பதாக பிரதேச மீனவர்களும் விவசாயிகளும் கவலைவெளியிட்டனர்.

கொக்கிளாய் கடல் நீரேரியைச் சூழ வாழும் மூன்று இன மக்களும் இணைந்து
இந்த உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கவனவீர்ப்பு போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்களும்
விவசாயிகளும் பங்கேற்றிருந்ததுனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வராசா கஜேந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...