ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவுக்கு இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின் இனி எந்த அரசாங்கத்திலும் நீதி கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.ஆனால் அரச நிர்வாகத்தில் ஊழல் மோசடி மிதமிஞ்சியுள்ளது. மின் விநியோக கொள்வனவு விலைமனுகோரலிலும் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதியமைச்சர் தலைமையில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குழு இன்றுவரை கூடவில்லை. நீதியமைச்சர் விருப்பத்துக்கு அமைவாகவே இவ்விடயத்தில் செயற்படுகிறார்.இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவுறுத்தியும் அவர் அதனை கவனத்திற் கொள்ளவில்லை.
Leave a comment