Home தென்னிலங்கைச் செய்திகள் அதிவேக நெடுஞ்சாலையில் 190 பில்லியன் ரூபாய் சேதம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் 190 பில்லியன் ரூபாய் சேதம்!

Share
Share

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால், அதிவேக நெடுஞ்சாலையில் மாத்திரம் சுமார் 190 பில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி (Wimal Kandambi) இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளம், மண்சரிவு மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவுகளால் அதிவேக நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையும் தொடர்புடைய சேதங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் நீர்ப்பாசன முறையும் பாரிய சேதங்களை சந்தித்துள்ளதாகவும் அவை தற்போது படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருவதாகவும் நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், துறைகள் வாரியாக சேதம் மற்றும் மீள்கட்டமைப்புக்கான நிதித் தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டைத் தயாரிக்க அரசாங்கம் உலக வங்கியுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...