முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு ஒன்று தொடர்பாக நீதிமன்றத்தில் முற்படத் தவறியமையை அடுத்தே கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு 90 இலட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையில் முற்படத் தவறியமைக்காகவே அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Leave a comment