Home தென்னிலங்கைச் செய்திகள் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த பேரணியில் பெருமளவானோர் பங்கேற்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த பேரணியில் பெருமளவானோர் பங்கேற்பு!

Share
Share

கூட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் பேரணி நுகேகொடையில் நடைபெற்ற நிலையில் பெருந்திரளான மக்கள் அங்கு கூடியுள்ளமையினை அவதானிக்கமுடிந்தது.

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

1965ஆம் ரோஹண விஜயவீரவினால் ஜேவிபி என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரே இலங்கை என்ற நாடு வீழ்ச்சியடைய தொடங்கியதாக இன்றைய கூட்டத்தில் தெரிக்கப்பட்டிருந்து.

அத்துடன் புதிய தலைமையிலான அரசாங்கம் ஒன்றின் தேவையை மக்கள் தற்போது உண்ர்ந்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் மிரிஹான பொலிஸ் பிரிவின் நுகேகொடையில் பிரிவிலுள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டிருந்தது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் தலதா அத்துகோரள, பிரதிப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ, சிறிலங்கா சுதந்திர முன்னணியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க, பொதுஜன ஐக்கிய முன்னணி தலைவர் சுகீஸ்வர பண்டார, மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன, மகிந்த அமரவீர, உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...