Home தென்னிலங்கைச் செய்திகள் கப்பலில் போதைப்பொருள்; ஏழு பேர் கைது! 06 வாகனங்கள் பறிமுதல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கப்பலில் போதைப்பொருள்; ஏழு பேர் கைது! 06 வாகனங்கள் பறிமுதல்!

Share
Share

கிரிந்த கடற்கரையில் கப்பலொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலுக்கமைய, மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய நேற்று புதன்கிழமை (12) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அவர்களிடமிருந்து, 329 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய, 06 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக, சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 394 மில்லியன் ரூபாய் என, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெறுவதற்காக திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

அதேநேரம், பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...