Home தென்னிலங்கைச் செய்திகள் எல்லை நிர்ணய அறிக்கையை மீள்பரிசீலனை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

எல்லை நிர்ணய அறிக்கையை மீள்பரிசீலனை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்!

Share
Share

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிப்புகள் இடம்பெற்று வருவதால் தேர்தல் ஆணைக்குழுவால் நிறைவு செய்யப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை தற்போதைய அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது
எவ்வித மீள்பரிசீலனையும் செய்யாமலேயே அப்போதைய பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் அந்த அறிக்கையை நிராகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச பொட்ஸ்வானா சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவால் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு உலகின் சிறந்த தேர்தல் ஆணைக்குழு என்ற கௌரவ விருது வழங்கல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது,

ஓய்வு பெறவுள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்கவின் சேவையைப் பாராட்டி பவ்ரல் அமைப்பால் விசேட நிகழ்வொன்றும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததுடன், இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

குறிப்பிட்ட காலப்பகுதியில் தேர்தல்களை நடத்தி முடித்துள்ளோம். அதேபோன்று, தேர்தல் ஆணைக்குழு உரிய காலப்பகுதிக்குள் எல்லை நிர்ணய அறிக்கையையும் நிறைவு செய்தது-என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...