Home தென்னிலங்கைச் செய்திகள் எல்லை நிர்ணய அறிக்கையை மீள்பரிசீலனை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

எல்லை நிர்ணய அறிக்கையை மீள்பரிசீலனை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்!

Share
Share

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிப்புகள் இடம்பெற்று வருவதால் தேர்தல் ஆணைக்குழுவால் நிறைவு செய்யப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை தற்போதைய அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது
எவ்வித மீள்பரிசீலனையும் செய்யாமலேயே அப்போதைய பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் அந்த அறிக்கையை நிராகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச பொட்ஸ்வானா சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவால் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு உலகின் சிறந்த தேர்தல் ஆணைக்குழு என்ற கௌரவ விருது வழங்கல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது,

ஓய்வு பெறவுள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்கவின் சேவையைப் பாராட்டி பவ்ரல் அமைப்பால் விசேட நிகழ்வொன்றும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததுடன், இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

குறிப்பிட்ட காலப்பகுதியில் தேர்தல்களை நடத்தி முடித்துள்ளோம். அதேபோன்று, தேர்தல் ஆணைக்குழு உரிய காலப்பகுதிக்குள் எல்லை நிர்ணய அறிக்கையையும் நிறைவு செய்தது-என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...