இனி வருங்காலங்களில் தொடர்ச்சியாக வாகனங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படலாம் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வாகனங்கள் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படுமாயின்,
இலங்கை ரூபாயின் பெறு மதிக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், வாகன இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக வாகனங்கள் இறக்குமதி செய்யத் தீர்மானிக்கலாம்.
இதனால் இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு பெரும் தாக்கம் ஏற்படுவதோடு அரசாங்கத்தின் நடைமுறை கணக்கில் பெரும் பற்றாக்குறையும் ஏற்படும்.
பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து சுயமாக மீட்சிபெறும் இலங்கை போன்ற நாட்டுக்கு இவ்வாறான நிலைமை ஆபத்தானதாகும்.
வாகன இறக்குமதியால் டொலர் பெருமளவு வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் டொலரை விட உள்வரும் டொலரின் அளவு குறைவாகும்.
இதனால், டொலரில் ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்திக்க கடன் வாங்க வேண்டும். அதனால் இன்றைய சூழலில் கடன் பெற்றுக் கொள்ளவும் முடியாது.
இவ்வாறான காரணங்களால் ரூபாயின் பெறுமதிக்கும் பெரும் தாக்கம் ஏற்படலாம் – என்று அரச நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளார்.
Leave a comment