Home தென்னிலங்கைச் செய்திகள் வாகனங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படலாம்?
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வாகனங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படலாம்?

Share
Share

இனி வருங்காலங்களில் தொடர்ச்சியாக வாகனங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படலாம் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாகனங்கள் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படுமாயின்,

இலங்கை ரூபாயின் பெறு மதிக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வாகன இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக வாகனங்கள் இறக்குமதி செய்யத் தீர்மானிக்கலாம்.

இதனால் இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு பெரும் தாக்கம் ஏற்படுவதோடு அரசாங்கத்தின் நடைமுறை கணக்கில் பெரும் பற்றாக்குறையும் ஏற்படும்.

பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து சுயமாக மீட்சிபெறும் இலங்கை போன்ற நாட்டுக்கு இவ்வாறான நிலைமை ஆபத்தானதாகும்.

வாகன இறக்குமதியால் டொலர் பெருமளவு வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் டொலரை விட உள்வரும் டொலரின் அளவு குறைவாகும்.

இதனால், டொலரில் ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்திக்க கடன் வாங்க வேண்டும். அதனால் இன்றைய சூழலில் கடன் பெற்றுக் கொள்ளவும் முடியாது.

இவ்வாறான காரணங்களால் ரூபாயின் பெறுமதிக்கும் பெரும் தாக்கம் ஏற்படலாம் – என்று அரச நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...