Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையின் மதுவரி உத்தியோகத்தர்களில் 20 சதவீதமானோர் மோசடியாளர்கள்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையின் மதுவரி உத்தியோகத்தர்களில் 20 சதவீதமானோர் மோசடியாளர்கள்!

Share
Share

மதுவரி உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள். நிலைமை மாறிவிட்டது. ஆகவே பழைய பழக்கத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் என்.எச். பிரேமரத்ன தெரிவித்தார்.

அகில இலங்கை மதுவரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 74 ஆவது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் மதுவரி திணைக்களம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரச வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் மதுவரித் திணைக்களம் பிரதானவொன்றாக காணப்படுகிறது.

நடப்பாண்டில் 242 மில்லியன் ரூபாய் என்ற இலாப இலக்கினை அடைந்துள்ளோம். இந்த இலாபத்தை மேலும் எம்மால் அதிகரித்துக்கொள்ள முடியும்.

சட்டவிரோத மதுபான உற்பத்திகளை தடுப்பது மற்றும் அனுமதிப்பெற்ற மதுபான நிலையங்களிடமிருந்து வரிகளை பெறுவது திணைக்களத்தின் பிரதான பணியாகும்.

மதுவரி உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ்வாறே தற்போதும் செயற்படுகிறார்கள். நிலைமை மாறிவிட்டது. ஆகவே பழைய பழக்கத்தை திருத்திக்கொள்ளுங்கள். சட்டத்துக்கு அமைய சிறந்த முறையில் செயற்படுங்கள் என்று குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...