Home தாயகச் செய்திகள் காணிகளை ஒப்படைத்தனர் கோப்பாய் பொலிஸார்! யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

காணிகளை ஒப்படைத்தனர் கோப்பாய் பொலிஸார்! யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம்!

Share
Share

கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால்
கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் நிலையம், இராசபாதையில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை கைப்பற்றி அமைக்கப்பட்டிருந்தது.

தமது காணிகள், வீடுகளில் இருந்து பொலிஸாரை வெளியேற்றி அவற்றை தம்மிடம் ஒப்படைக்குமாறு, யாழ்.மாவட்ட நீதிமன்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 07 உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணைகள் கடந்த 06 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி பொலிஸார் தனியார் காணிகள், வீடுகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்துவிட்டு, வெளியேற வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 மாதங்களுக்கு மேலாகியும், பொலிஸார் காணிகள், வீடுகளை ஒப்படைக்காத நிலையில் நேற்று புதன்கிழமை நீதிமன்றப் பதிவாளரின் முன்னிலையில் பொலிஸார் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு உரிமையாளர்களிடம் காணிகள்,
வீடுகள் கையளிக்கப்பட்டன.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமது காணிகள், வீடுகளை இழந்து வாடகை வீடுகளில் தங்கியிருந்தவர்கள் தற்போது சொந்த காணிகள், வீடுகள் கிடைத்தமை பெரும் மகிழ்ச்சி
அடைந்தனர்.

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

உயர்தர மாணவர்களில் 24 சதவீதமானோருக்கு மன அழுத்தம்!

இலங்கையில் உள்ள பாடசாலைகளில், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு...

மிரட்டி கப்பம் பெற முயன்ற இருவருக்கு மட்டக்களப்பில் விளக்கமறியல்!

மட்டக்களப்பு புன்னைச்சோலை பகுதியில் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்த இரண்டு இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....

நாட்டில் ஒரே நாளில் 4,539 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (15) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,539 பேர்...

2026 இல் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் – லால் காந்த!

2026 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிமொழியை அமைச்சர் லால் காந்த...