Home தென்னிலங்கைச் செய்திகள் இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் சிக்கினார்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் சிக்கினார்!

Share
Share

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டை விட்டு தப்பியோடிய அவர் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) மற்றும் நேபாள பொலிஸார் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 19 அன்று வாழைத்தோட்டம் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உதவியதாகக் கூறப்படும் ‘இஷாரா செவ்வந்தி’ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கடந்த செப்டெம்பர் மாதம் தெரிவித்தது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவு ‍வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி...

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவத் தயார் – சீனப் பிரதமர்!

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதியளித்துள்ளது. மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...

மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும்...

மட்டக்களப்பில் விபத்து! மூவர் காயம்!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி...