Home தென்னிலங்கைச் செய்திகள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராகச் செயற்படமாட்டோம் – அமைச்சர் லால் காந்த!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராகச் செயற்படமாட்டோம் – அமைச்சர் லால் காந்த!

Share
Share

நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்படமாட்டோம் என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாங்கள் மக்களுக்கு ஒரு வாக்குறுதியை வழங்கினோம் அல்லவா, அமைச்சரவையில் 25 பேருக்கு மேல் இருக்கமாட்டார்கள் என்று. இப்போது 25 அதிகரித்துவிட்டதா? இல்லைத்தானே.

அப்படியொன்றும் தெரியவில்லையே. நாங்கள் கடந்தமுறை அமைச்சர்களை நியமிக்கும்போது தேவையெனில் மேலும் சிலரை நியமிப்பதற்கான ஒரு வெற்றிடத்தை வைத்திருந்தோம். எனினும் நாங்கள் எல்லையை கடக்க மாட்டோம். இதுவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி.

எங்களுக்கு தற்போது பொறுப்புக்கள் அதிகரித்ததன் காரணமாக அதற்காக பணியாற்றவேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. எனவே கடமைகளை பகிந்தளிக்கவேண்டிய தேவை உள்ளது. அதற்காகவே இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு
நடவடிக்கை.

ஏனைய அனைவரையும் பற்றி எங்களுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தோழரைப் பற்றி நன்குதெரியும். முழு அர்ப்பணிப்புடன் தனது கடமையை மேற்கொண்டு வரும் ஒரு அரசியல்வாதி என்ற ரீதியில் அவருக்கு எந்தவொரு மோசடி நடவடிக்கையிலும்
ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை.

அங்கு வேறு ஏதோ ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதனை ஆராய்ந்து பார்ப்பதற்காகவே ஜனாதிபதி ஒரு விசாரணை குழுவை நியமித்துள்ளார்-என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...