பாடசாலை மாணவர்களுக்கு சட்டக்கல்வியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக
பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தரம் 6 முதல் 8 வரையான பாடவிதானங்களில், குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்விதொடர்பான பகுதியை இணைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி மறுசீரமைப்பின் போது சாதாரண தரத்திலும் இதனை தெரிவுப் பாடமாக இணைக்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதன்படி, குடியுரிமை பாடத்தில் 6ஆம் தரத்துக்கான சட்டக்கல்வி, மூன்றாம் தவணைக்கான மாதிரியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒழுக்கமான சமூகத்துக்காக சட்டம் தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை
கருத்தில்கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment