Home தாயகச் செய்திகள் வடக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வடக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

Share
Share

முறையான தேடுதல் உத்தரவு (Search Warrant) இன்றி, பெண் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அத்துமீறிச் செயற்பட்டதைக் கண்டித்து, வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒருநாள் பணிப் புறக்கணிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாத்தில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

இது சட்டத்தரணி மீது நடவடிக்கை எடுப்பதைக் கண்டிப்பதல்ல என்றும், மாறாக சட்டத்துக்கு முரணாக காவல்துறையினர் பொதுமக்களுக்கு எதிராகச் செயற்படுவதைக் கண்டிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரன் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகக் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் சில மணி நேரம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...