Home தென்னிலங்கைச் செய்திகள் மஹிந்தவிற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் – சரத் பொன்சேகா!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மஹிந்தவிற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் – சரத் பொன்சேகா!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சலுகைகளைப் பறித்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாத்தறையில் நடந்த நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் நிலவும் உலகளாவிய ஊழல் வலையமைப்பைக் ராஜபக்ஷ குடும்பமே கட்டுப்படுத்துகிறது. அவர்களின் சலுகைகளைப் பறித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

தான் நீதி அமைச்சராக இருந்தால், மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து எடுத்துச் சென்ற பெறுமதியான பொருட்களை 24 மணி நேரத்திற்குள் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்வேன்.

2009 போரின் முடிவு 10 கிலோமீற்றம் தூரத்தில் இருந்தபோது மஹிந்த ராஜபக்ஷ ஏன் போர்நிறுத்தத்தை அறிவித்தார் என்று நாட்டுக்கு விளக்க வேண்டும். அது பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அவர் இந்த முயற்சிகளை மேற்கொண்டார்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற விடுதலைப்புலிகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்தார்.

நாங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுகிறோம், ஆனால் அவர் அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்.

பயங்கரவாதிகளுக்கு பணத்தை கொடுப்பது தேசத்துரோகம் இல்லையா? மற்ற நாடுகளாயின், மஹிந்த ராஜபக்ஷ கடுமையான தண்டனைக்கு ஆளாகியிருப்பார்.

எமது அரசியலமைப்பின் படியும், அவருக்குரிய தண்டனை தூக்குத் தண்டனையே” என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...