Home தாயகச் செய்திகள் யாழில் கைதான பெண் சட்டத்தரணிக்குப் பிணை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணிக்குப் பிணை!

Share
Share

யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் சட்டத்தரணி 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ். பொம்மைவெளிப் பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அந்தக் காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய பெண் சட்டத்தரணி இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர் , பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானின் முன்னிலையில் முற்படுத்திய வேளை, அவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளது.

அதேவேளை, மேற்படி பெண் சட்டத்தரணியின் வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுகிழமை பொலிஸார் அத்துமீறி நுழைந்து எவ்விதமான நீதிமன்றக் கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக நடந்து கொண்டனர் எனவும், பொலிஸாரின் இந்தச் செயல்களைக் கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டம் நடத்தவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி வழக்குகளில் சட்டத்தரணிகள் சிலர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்குத் தாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...