Home தாயகச் செய்திகள் யாழில் கைதான பெண் சட்டத்தரணிக்குப் பிணை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணிக்குப் பிணை!

Share
Share

யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் சட்டத்தரணி 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ். பொம்மைவெளிப் பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அந்தக் காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய பெண் சட்டத்தரணி இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர் , பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானின் முன்னிலையில் முற்படுத்திய வேளை, அவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளது.

அதேவேளை, மேற்படி பெண் சட்டத்தரணியின் வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுகிழமை பொலிஸார் அத்துமீறி நுழைந்து எவ்விதமான நீதிமன்றக் கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக நடந்து கொண்டனர் எனவும், பொலிஸாரின் இந்தச் செயல்களைக் கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டம் நடத்தவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி வழக்குகளில் சட்டத்தரணிகள் சிலர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்குத் தாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...

பல்லாயிரக்கணக்கில் திரண்டு மக்கள் உன்னதர்களை நினைவேந்தினர்!

தமிழினத்தின் விடுதலைக்காக போராடி – களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை அஞ்சலிக்கும் மாவீரர்கள் நாள்...