மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞர் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த 30 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து அடம்பன் பகுதிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற நிலையிலே இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மகன் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த இளைஞன் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 076- 712 1294 மற்றும் 077- 063 1135 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a comment