Home தென்னிலங்கைச் செய்திகள் வரியில்லா வாகன அனுமதிகளுக்கு தொடர்ந்தும் சிக்கல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வரியில்லா வாகன அனுமதிகளுக்கு தொடர்ந்தும் சிக்கல்!

Share
Share

அரச சேவையின் மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வரியில்லா வாகன அனுமதிகள், எதிர்வரும் பாதீட்டில் மீண்டும் வழங்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே வழங்கப்பட்ட சுமார் 23,000 அதிகாரிகளுக்கான அனுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் மேலும் அதிகாரிகள் இந்த வசதிக்குத் தகுதி பெறுகின்றனர்.

எனினும், சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்கான – ஆண்டு இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருப்பு இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த வசதியை நிறுத்தி வைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக, ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாகன இறக்குமதி காரணமாக மொத்த அந்நிய செலாவணி வெளியேற்றம் முதல் எட்டு மாதங்களில் 918 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தனியார் துறை ஊழியர்களின் வேதன அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கமைய, அரச துறையில் ஊழியர்களின் வேதன அதிகரிப்புக்கு இணையாகத் தனியார்...

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி...

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவத் தயார் – சீனப் பிரதமர்!

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதியளித்துள்ளது. மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...

மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும்...