Home தென்னிலங்கைச் செய்திகள் மின் கட்டணம் அதிகரிக்கிறது?
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மின் கட்டணம் அதிகரிக்கிறது?

Share
Share

மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் உயர்த்துவது தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அதன்படி, இந்த மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இறுதி முடிவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கான பொது ஆலோசனை செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த மாதம் 8 ஆம் திகதி மேல் மாகாண ஆலோசனையின் இறுதி அமர்வு நடைபெற்ற பின்னர், கட்டணங்களைத் திருத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

இந்த கட்டணத் திருத்தத்தில் மின்சாரச் சட்டம் மற்றும் மின்சாரக் கட்டண விலை சூத்திரம் பின்பற்றப்படும். இந்த ஆண்டு ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை மின்சார சபை ரூ. 1,769 மில்லியன் இழப்பீட்டை பதிவு செய்துள்ளது. 

இந்த இழப்பை சரி செய்ய 6.8 சதவீத மின்சார கட்டண உயர்வு முன்மொழியப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...