Home தாயகச் செய்திகள் மன்னார் பொலிஸார் கைது செய்த இளைஞர் மரணம்! மரணத்தில் சந்தேகம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மன்னார் பொலிஸார் கைது செய்த இளைஞர் மரணம்! மரணத்தில் சந்தேகம்!

Share
WIDE SHOT two pairs of Black and Caucasian male hands resting on prison cell bars
Share

மன்னார் பேசாலை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் திடீர் சுகவீனமுற்ற நிலையில் மன்னார் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் உடலம் மீதான பிரேத பரிசோதனை மன்னார் பொது மருத்துவமனையில் நாளை நடைபெறவுள்ளது. வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 34 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஜஸ் போதைப் பொருள் தொடர்பில் குறித்த இளைஞன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் பேசாளை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மந்திரிமனையின் வாயிற் கூரைகள் அகற்றப்படுகின்றன!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள்...

சர்வதேச விசாரணையை பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள்தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார்...

சாட்சி இருந்தால் போர்க்குற்றம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்கிறார் பொன்சேகா!

இறுதிப்போரின்போது ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்குரிய சாட்சி இருந்தால் நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று...

யாழில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் சொகுசு பஸ் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாசன் பிரேமதாஸ் எனும் மீன்...