Home தாயகச் செய்திகள் மது பாவனையால் தினமும் இலங்கையர்கள் 50 பேர் மரணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மது பாவனையால் தினமும் இலங்கையர்கள் 50 பேர் மரணம்!

Share
Share

மது பாவனையால் தினமும் சுமார் இலங்கையர்கள் 50 பேர் மரணமடைகின்றனர் – என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் மதுசாரத்துக்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மதுபாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைக்கவும் மது பாவனையால் ஏற்படுகின்ற சுகாதார, பொருளாதார பிரச்னைகளைக் குறைக்கவும் விரைவான அரச திட்டம் அவசியம்.

நாட்டில், நிகழும் மரணங்களில் 83 சதவீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மது பாவனையால் தினமும் சுமார் 50 பேர் மரணமடைகின்றனர்.

மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் மரணமடைகிறார்கள்.

இருதய நோய், புற்றுநோய் போன்றவற்றுக்கு மதுசார பாவனையும் முக்கிய காரணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...