Home தாயகச் செய்திகள் மது பாவனையால் தினமும் இலங்கையர்கள் 50 பேர் மரணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மது பாவனையால் தினமும் இலங்கையர்கள் 50 பேர் மரணம்!

Share
Share

மது பாவனையால் தினமும் சுமார் இலங்கையர்கள் 50 பேர் மரணமடைகின்றனர் – என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் மதுசாரத்துக்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மதுபாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைக்கவும் மது பாவனையால் ஏற்படுகின்ற சுகாதார, பொருளாதார பிரச்னைகளைக் குறைக்கவும் விரைவான அரச திட்டம் அவசியம்.

நாட்டில், நிகழும் மரணங்களில் 83 சதவீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மது பாவனையால் தினமும் சுமார் 50 பேர் மரணமடைகின்றனர்.

மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் மரணமடைகிறார்கள்.

இருதய நோய், புற்றுநோய் போன்றவற்றுக்கு மதுசார பாவனையும் முக்கிய காரணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...