Home தாயகச் செய்திகள் முகமாலையில் எறிகணைக் குண்டுகள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

முகமாலையில் எறிகணைக் குண்டுகள் மீட்பு!

Share
Share

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை வெடிக்காத நிலையில் 31 எறிகணைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டைச் சுத்தம் செய்யும் போது பள்ளம் தோண்டியுள்ளார். அதன்போது கிடங்கினுள் ஆபத்தான நிலையில் வெடிக்காத குண்டுகள் காணப்பட்டுள்ளன.

அது தொடர்பில் உடனடியாக வீட்டு உரிமையாளர் பளை பொலிஸார்க்கு அறிவித்தார்.

அறிவித்தலில் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அந்தக் குண்டுகளை மீட்பதற்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்று அவற்றை மீட்டுச் சென்றுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...