Home தாயகச் செய்திகள் அகழ்வுக்கு நிதி இல்லை; செம்மணி வழக்கு ஒத்திவைப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அகழ்வுக்கு நிதி இல்லை; செம்மணி வழக்கு ஒத்திவைப்பு!

Share
Share

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி பகுதியில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று (1) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி தொடர்பான அறிவிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறாமையினால், குறித்த வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார்.

நிதி கிடைத்தவுடன் அகழ்வுப் பணிகளைத் தொடர்வது குறித்து தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...