Home தாயகச் செய்திகள் அகழ்வுக்கு நிதி இல்லை; செம்மணி வழக்கு ஒத்திவைப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அகழ்வுக்கு நிதி இல்லை; செம்மணி வழக்கு ஒத்திவைப்பு!

Share
Share

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி பகுதியில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று (1) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி தொடர்பான அறிவிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறாமையினால், குறித்த வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார்.

நிதி கிடைத்தவுடன் அகழ்வுப் பணிகளைத் தொடர்வது குறித்து தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் முருங்கனில் ஒருவர் மரணம்!

மன்னார், முருங்கன் – இசமலாதவுல் பகுதியில் மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர்உயிரிழந்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்....

30 கோடி ரூபா நிதி மோசடி! யாழில் ஒருவர் கைது!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக்கூறி, 30 கோடி ரூபா நிதியை அபகரித்த நபர் ஒருவர், யாழ்ப்பாணம் நிதிக்குற்றத் தடுப்புப்...

கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில்,...

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவத் தயார் – சீனப் பிரதமர்!

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதியளித்துள்ளது. மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...