Home தாயகச் செய்திகள் 11 வருடங்களாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் வியாபாரிக்கு விளக்கமறியல்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

11 வருடங்களாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் வியாபாரிக்கு விளக்கமறியல்!

Share
Share

மட்டக்களப்பு, காத்தான்குடியில் 11 வருடங்களாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த – 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட – பிரபல பெண் போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து காத்தான்குடி 6 ஆம் பிரிவு ஜின்னா மாவத்தையிலுள்ள வீடு ஒன்றை கடந்த 22 ஆம் திகதி பொலிஸெ முற்றுகையிட்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் வியாபாரியை 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்தனர்

அவரைக் கைது செய்து நடத்திய விசாரணையை அடுத்து அவர் வழங்கிய தகவலுக்கு அமைய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 4 பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமையை அடுத்து அவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண் வியாபாரி கடந்த 11 வருடங்களாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும், இதுவரை அவர் பொலிஸாரினால் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்தப் பெண் வியாபாரியை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாள்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதி பெற்று, அவரைப் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...

பல்லாயிரக்கணக்கில் திரண்டு மக்கள் உன்னதர்களை நினைவேந்தினர்!

தமிழினத்தின் விடுதலைக்காக போராடி – களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை அஞ்சலிக்கும் மாவீரர்கள் நாள்...