Home தென்னிலங்கைச் செய்திகள் மக்களை ஏமாற்றிய என்.பி.பி. அரசாங்கம் – சாடுகின்றார் நாமல்
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மக்களை ஏமாற்றிய என்.பி.பி. அரசாங்கம் – சாடுகின்றார் நாமல்

Share
Share

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான என்.பி.பி. அரசு பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அதைத் தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“திருடனும் மக்களோடு இணைந்து திருடனைப் பிடிப்பது போல் தான் என்.பி.பி. அரசும் செயற்படுகின்றது. அரசில் உள்ள பலரின் சொத்து விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசு  போதைப்பொருளை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது. அரசின் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களே சுங்கத்தில் இருந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தனர். ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர்  கொள்கலன்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன  என்பது தனக்குத் தெரியும் எனக் கூறியுள்ளார்.

குறித்த கொள்கலன்கள் சுங்கப் பிரிவு மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால் பரிசோதிக்கப்பட இருந்ததுடன், சர்வதேச புலனாய்வுப் பிரிவிடம் இருந்தும் தகவல்களும் கிடைத்திருந்தன. இந்நிலையில் அவை விடுவிக்கப்பட்டுள்ளன.

அரசு தொடர்ந்தும் எம் மீது குற்றம் சுமத்துவதை விடுத்து போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்களையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் எம் மீது பழி சுமத்தி இதிலிருந்து தப்ப முடியாது. ஒரு வருடத்தை எமது தரப்பைக் குற்றம் சாட்டியே கடந்து விட்டனர். மீதமுள்ள 4 வருடங்களையும் அவ்வாறே கடந்து விடுவார்கள். என்.பி.பி. அரசு பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அதைத் தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...