Home தாயகச் செய்திகள் யானை தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யானை தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!

Share
Share

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பெரிய வேதம், பூலாக்காடு, கிரான் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய எட்டு பிள்ளைகளின் தந்தையான மூத்த தம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர் சம்பவ தினமான நேற்று முன்தினம் காலை தனது வீட்டிலிருந்து பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் மீன்பிடிப்பதற்காகச் சென்றார்.

இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரை உறவினர்கள் தேடிச் சென்ற போது, நேற்றுக் காலை யானை தாக்கி உயிரிழந்த நிலையில்
சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, சம்பவ இடத்துக்குச் சென்ற கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார மருத்துவமனையில் சடலத்தை ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...