Home தாயகச் செய்திகள் மல்லாகம் மேலதிக நீதவான் பதவி நீக்கம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மல்லாகம் மேலதிக நீதவான் பதவி நீக்கம்!

Share
Share

மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் என்.பார்த்தீபன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபறாஜினி ஜெகநாதனுக்கெதிராக நீதிச்சேவை ஆணைக்குழுவில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொர்பான விசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 23.09.2025 அன்று நீதிச் சேவை ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் குறித்த நீதிவான், நீதவான் ஒருவருக்குரிய கண்ணியமான
நடத்தையை வெளிப்படுத்தியிருக்காத குற்றச்சாட்டுக்கு ஏதுவான சான்றுகள் முற்படுத்தப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தினை உடனடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் கையளித்ததன் அடிப்படையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் 23.09.2025 இலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், நேற்று நீதிச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மல்லாகம் நீதிமன்றத்துக்கு காலை வேளை பிரசன்னமாகி பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவானின் சமாதான அறை மற்றும் அதில் உள்ள பொருட்களை பொறுப்பேற்று நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய மேல் நீதிமன்ற நீதிபதி, புதிய நீதவான் ஒருவர் வெகுவிரைவில் நியமிக்கப்படுவார் என சட்டத்தரணிகளுக்கு உத்தரவாதம் வழங்கியிருந்தார் – என குறிப்பிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...