Home தென்னிலங்கைச் செய்திகள் மேலதிக கொடுப்பனவை வழங்குமாறு கோரி அரச சித்த மருத்துவ அதிகாரிகள் போராட்டம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மேலதிக கொடுப்பனவை வழங்குமாறு கோரி அரச சித்த மருத்துவ அதிகாரிகள் போராட்டம்!

Share
Share

அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் ஆயுர்வேத மருத்துவர்களுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்கக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் மாகாண ரீதியில் சுழற்சி முறையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் இன்று வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் – கைதடி சித்த மருத்துவ வைத்தியசாலைக்கு முன்பாகக் கவனவீர்ப்புப் போராட்டமும் இடம்பெற்றது.

இதன்போது ஆயுர்வேத வைத்தியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேலதிக கொடுப்பனவை உடன் வழங்கு, சம்பள மறுசீரமைப்பு எங்கே, நிர்வாகமே மமதை வேண்டாம், பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தா போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி...

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவத் தயார் – சீனப் பிரதமர்!

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதியளித்துள்ளது. மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...

மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும்...

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் சிக்கினார்!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச்...