Home தென்னிலங்கைச் செய்திகள் நீதி அமைச்சர் ஜெனீவா பயணம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

நீதி அமைச்சர் ஜெனீவா பயணம்!

Share
Share

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் காணாமல்போனோர் தொடர்பான குழுவின் இலங்கையின் முதலாவது காலமுறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று புதன்கிழமை பயணமாகின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் நடைபெறும் இலங்கையின் முதலாவது ஆய்வுக்கூட்டம் இதுவாகும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையில் இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், அதன் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நீதி அமைச்சர் விளக்கமளிக்கவுள்ளார்.

இந்தக் கூட்டம், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை, குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினையைச் சர்வதேச அரங்கில் விவாதிப்பதற்கு ஒரு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...