Home தென்னிலங்கைச் செய்திகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும் என்கிறது ஜே.வி.பி!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும் என்கிறது ஜே.வி.பி!

Share
Share

“வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய யோசனை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு உட்பட முக்கிய பல விடயங்களை மையப்படுத்தியமாகவே புதிய அரசமைப்புக்குரிய பணி இடம்பெறும். இதனை நாம் நிச்சயம் செய்வோம். இதற்கு எமக்கு கால அவகாசம் அவசியம்.”

– இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அறிவித்தார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு உறுதிமொழிக்கும் நாம் நிச்சயம் பொறுப்புகூறுவோம்.

முதலில் தள்ளாடும் நிலையில் உள்ள பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த வேண்டும். மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும். ஊழல், மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவற்றை செய்யாமல் எடுத்த எடுப்பிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் கைவைத்தால் மக்கள் அதனை விரும்பமாட்டார்கள்.

எமக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன. தற்போதுள்ள அரசமைப்புக்குப் பதிலாக புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய பணியின்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும், புதிய தேர்தல் முறைமை உருவாக வேண்டும், அனைத்து மக்களுக்கும் உரிமைகள் கிடைக்ககூடிய வகையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய யோசனைகள் இருக்க வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவற்றை உள்ளடக்கிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு கால மெடுக்கும். நிபுணர்கள் மற்றும் மக்களின் கருத்துகளை உள்வாங்கி அரசமைப்பு தயாரிக்கப்படும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...