Home தென்னிலங்கைச் செய்திகள் வன்னியில் அபகரிக்கப்பட்ட 6 ஆயிரம் தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வன்னியில் அபகரிக்கப்பட்ட 6 ஆயிரம் தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம்!

Share
Share

இறுதிப் போரில் படையினரால் அபகரிக்கப்பட்ட பத்தாயிரம் தங்கப் பொருட்களில் 6 ஆயிரம் பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (22) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்தது.

முந்தைய விசாரணையின்போது, இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 10 ஆயிரம் தங்கப் பொருட்களை பரிசோதித்து அதில் உள்ள தங்கத்தின் அளவு மற்றும் எடை குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்துக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நகல்களுடன் சமர்ப்பிக்குமாறு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

அதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையால் பரிசோதிக்கப்பட்ட 6 ஆயிரம் தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு மாற்றப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் இன்று அழைக்கப்பட்டபோது சமர்ப்பணங்களை முன்வைத்து குறித்த அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...