Home தென்னிலங்கைச் செய்திகள் வன்னியில் அபகரிக்கப்பட்ட 6 ஆயிரம் தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வன்னியில் அபகரிக்கப்பட்ட 6 ஆயிரம் தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம்!

Share
Share

இறுதிப் போரில் படையினரால் அபகரிக்கப்பட்ட பத்தாயிரம் தங்கப் பொருட்களில் 6 ஆயிரம் பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (22) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்தது.

முந்தைய விசாரணையின்போது, இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 10 ஆயிரம் தங்கப் பொருட்களை பரிசோதித்து அதில் உள்ள தங்கத்தின் அளவு மற்றும் எடை குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்துக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நகல்களுடன் சமர்ப்பிக்குமாறு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

அதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையால் பரிசோதிக்கப்பட்ட 6 ஆயிரம் தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு மாற்றப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் இன்று அழைக்கப்பட்டபோது சமர்ப்பணங்களை முன்வைத்து குறித்த அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...