Home தாயகச் செய்திகள் மோட்டார் சைக்கிளை மோதிய உழவூர்தி! யாழில் பெண் மரணம்! இளைஞர் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிளை மோதிய உழவூர்தி! யாழில் பெண் மரணம்! இளைஞர் படுகாயம்!

Share
Share

மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் உழவு இயந்திரம் மோதியதில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவில் கச்சாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில், கெற்பேலி மேற்கு – மிருசுவிலை சேர்ந்த நந்த குமார் ஜெயலக்ஷ்மி (வயது 46) என்பவரே உயிரிழந்தார். கனகலிங்கம் செந்தூரன் (வயது 22) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,

குடும்பப் பெண்ணும் அவரின் உறவினருமான இளைஞரும் மோட்டார் சைக்கிளில் கச்சாய் வீதியூடாக கொடிகாமம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அதே திசையில் பயணித்த மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் உழவு
இயந்திரம் மோட்டார் சைக்கிளை மோதியது.

இதில், குடும்பப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த இளைஞர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதேநேரம், விபத்தை ஏற்படுத்திய உழவு இயந்திரம் தப்பிச் சென்றுள்ளது. விபத்துக் குறித்த விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரம்படி படுகொலை நினைவேந்தல்!

இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்...

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...

சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குறித்த...