மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் உழவு இயந்திரம் மோதியதில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவில் கச்சாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், கெற்பேலி மேற்கு – மிருசுவிலை சேர்ந்த நந்த குமார் ஜெயலக்ஷ்மி (வயது 46) என்பவரே உயிரிழந்தார். கனகலிங்கம் செந்தூரன் (வயது 22) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,
குடும்பப் பெண்ணும் அவரின் உறவினருமான இளைஞரும் மோட்டார் சைக்கிளில் கச்சாய் வீதியூடாக கொடிகாமம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அதே திசையில் பயணித்த மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் உழவு
இயந்திரம் மோட்டார் சைக்கிளை மோதியது.
இதில், குடும்பப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த இளைஞர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதேநேரம், விபத்தை ஏற்படுத்திய உழவு இயந்திரம் தப்பிச் சென்றுள்ளது. விபத்துக் குறித்த விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment