Home தாயகச் செய்திகள் கனகராயன்குளத்தில் பெண் மீது மோதிய வாகனம்; தப்பித்த சந்தேகநபர்கள் இருவர் சிக்கினர்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கனகராயன்குளத்தில் பெண் மீது மோதிய வாகனம்; தப்பித்த சந்தேகநபர்கள் இருவர் சிக்கினர்!

Share
Share

கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதி தப்பிச்சென்ற வாகனம் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (20) மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த குடும்பபெண் ஒருவர் கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்பட்ட முரன்பாட்டை தொடர்ந்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க சென்றுள்ளார்.

இதன்போது A9 வீதியில் வைத்து வாகனம் ஒன்று அவரை மோதியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அந்தபகுதியை சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்ததுடன், இது தொடர்பாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் அதன் சாரதி,மற்றும் உரிமையாளர் ஆகியோர் விசுவமடு பகுதியில் வைத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

வாகனத்தின் நிறம் உட்பட ஏனைய அமைப்புக்களை மாற்றியமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்க மற்றும் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...

பல்லாயிரக்கணக்கில் திரண்டு மக்கள் உன்னதர்களை நினைவேந்தினர்!

தமிழினத்தின் விடுதலைக்காக போராடி – களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை அஞ்சலிக்கும் மாவீரர்கள் நாள்...