எதிர்வரும் ஜனவரி மாதம் அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
25 பஸ் நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்வில் பங்கேற்ற வேளை அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
எதிர்வரும் ஜனவரி மாதம், அனைத்து அரச ஊழியர்களுக்கும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சம்பள உயர்வை வழங்குவார்.
பஸ் நிலையங்களில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு, அதிக ஊதியம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த நிறுவனங்கள், மக்களுக்கு முழுமையாக சேவை செய்யும் திறமையான நிறுவனங்களாக மாற்றப்படவேண்டும் – என்றார்.
Leave a comment