Home தென்னிலங்கைச் செய்திகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் முறைப்பாடு; விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் முறைப்பாடு; விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு!

Share
Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட விசேட புலனாய்வுப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

நேற்று (18) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரிவில், பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட 16 பொலிஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

1985ஆம் ஆண்டு “வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை அதிகார சபை” என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுபவர்களின் முறைப்பாடுகளுக்கு பயனுள்ள மற்றும் உடனடி தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுப்பது, முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது மற்றும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதை இலக்காகக் கொண்டு இந்தப் பிரிவு நிறுவப்பட்டதாக, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

மேலும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தப் பிரிவு விரைவாக நிறுவப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தென் கடல் பகுதியில் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51...

கிளிநொச்சியில் 40 எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை...

செவ்வந்தி கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என்பதை...

மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் முருங்கனில் ஒருவர் மரணம்!

மன்னார், முருங்கன் – இசமலாதவுல் பகுதியில் மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர்உயிரிழந்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்....