Home தென்னிலங்கைச் செய்திகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் முறைப்பாடு; விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் முறைப்பாடு; விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு!

Share
Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட விசேட புலனாய்வுப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

நேற்று (18) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரிவில், பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட 16 பொலிஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

1985ஆம் ஆண்டு “வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை அதிகார சபை” என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுபவர்களின் முறைப்பாடுகளுக்கு பயனுள்ள மற்றும் உடனடி தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுப்பது, முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது மற்றும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதை இலக்காகக் கொண்டு இந்தப் பிரிவு நிறுவப்பட்டதாக, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

மேலும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தப் பிரிவு விரைவாக நிறுவப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...