Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சிகளின் ஒருமித்த முடிவு அவசியம் – சஜித் அணி எம்.பிக்களிடம் இந்தியத் தூதுவர் வலியுறுத்து!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சிகளின் ஒருமித்த முடிவு அவசியம் – சஜித் அணி எம்.பிக்களிடம் இந்தியத் தூதுவர் வலியுறுத்து!

Share
xr:d:DAFPA4-cxsE:1381,j:938277430868868727,t:23091318
Share

மாகாண சபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் விரைவாக நடத்துமாறு இலங்கை அரசிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும், இந்தத் தேர்தலை நடத்த சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா நேற்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொழும்பில் சந்தித்துக்  கலந்துரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹர்ஷண ராஜகருணா, தயாசிறி ஜயசேகர மற்றும் நளின் பண்டார ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போதே இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் இந்திய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சந்திப்பின் போது பரந்தளவிலானதும் பன்முக அடிப்படையிலானதுமான இலங்கை – இந்திய உறவுகள் மற்றும் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...