Home தென்னிலங்கைச் செய்திகள் ஆசிரியர்கள் முன்னெடுத்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆசிரியர்கள் முன்னெடுத்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு!

Share
Share

தேசிய பாடசாலைகளில் 3 வருடங்களை பூர்த்திசெய்த கல்விசார், கல்விசாரா ஊழியர்களுக்கு, தங்களது பிள்ளைகளை தாங்கள் பணியாற்றும் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வாய்ப்பை மீண்டும் வழங்குமாறு ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. 

ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னரே போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இப்பிரச்சினையை முன்னிறுத்தி கடந்த சில நாட்களாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இருப்பினும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என தெரிவித்து, குறித்த குழுவினர் கல்வி அமைச்சுக்கு சென்றிருந்தனர். 

பின்னர், கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனான பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாகக் கூறி கல்வியமைச்சரின் காரியாலயத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்ததுடன், அவர்களில் சிலருக்கு ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலை நடத்துவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது கலந்துரையாடலின் பின்னர் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...