Home தென்னிலங்கைச் செய்திகள் மடு மாதா தேவாலயத்துக்குச் சென்று திரும்பிய இளைஞர் மல்வத்து ஓயாவில் மூழ்கி உயிரிழப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மடு மாதா தேவாலயத்துக்குச் சென்று திரும்பிய இளைஞர் மல்வத்து ஓயாவில் மூழ்கி உயிரிழப்பு!

Share
Share

மடு மாதா தேவாலயத்துக்குச் சென்று திரும்பிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மல்வத்து ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த போதே மேற்படி இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று தந்திரிமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த இளைஞர் உறவினர்களுடன் இணைந்து மடு மாதா தேவாலயத்துக்குச் சென்றுள்ள நிலையில் வழிபாடுகளை முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போது நீராடுவதற்காக மல்வத்து ஓயாவுக்குச் சென்றுள்ளார்.

மேற்படி இளைஞரும் உறவினர்களும் இணைந்து மல்வத்து ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த போது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர்  ஆவார்.

இது தொடர்பில் தந்திரிமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...