காட்டு யானை தாக்கி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு ட்பட்ட பெத்கேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
இவர் தனது வயலைச் சுத்தம் செய்துகொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார் என்று கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment