Home தாயகச் செய்திகள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகேஸ்வரன் வீதி விபத்தில் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகேஸ்வரன் வீதி விபத்தில் மரணம்!

Share
Share

திருகோணமலை – அனுராதபுரம் சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் (வயது 71) உயிரிழந்துள்ளார்.

மூதூர், சம்பூரில் இருந்து திருகோணமலை நகரில் மரணச்சடங்கு ஒன்றுக்கு பஸ்ஸில் வருகை தந்த நாகேஸ்வரன், பாதசாரிக் கடவையின் ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண் ஒருவர், அவர் மீது மோதியுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...