Home தாயகச் செய்திகள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகேஸ்வரன் வீதி விபத்தில் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகேஸ்வரன் வீதி விபத்தில் மரணம்!

Share
Share

திருகோணமலை – அனுராதபுரம் சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் (வயது 71) உயிரிழந்துள்ளார்.

மூதூர், சம்பூரில் இருந்து திருகோணமலை நகரில் மரணச்சடங்கு ஒன்றுக்கு பஸ்ஸில் வருகை தந்த நாகேஸ்வரன், பாதசாரிக் கடவையின் ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண் ஒருவர், அவர் மீது மோதியுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...