Home தென்னிலங்கைச் செய்திகள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!

Share
Share

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்குப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து, இந்த விசேட கூட்டுத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களாக, பாடசாலை போக்குவரத்து வாகனங்களுடன் தொடர்புடைய பல விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். 

இந்தநிலையில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் பாடசாலை தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அமைச்சு பொருத்தமான பரிந்துரைகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும், புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்குமென கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரச்சினைகளைத் தீர்க்க அரசுக்கு திறமையில்லையேல் நாடே அழியும்! – நேபாளத்தின் நிலையை சுட்டிக்காட்டி ரணில் விசேட அறிக்கை!

“நேபாளத்தில் நீண்ட காலமாகக் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. தெற்காசிய பாரம்பரியத்தின்படி, கடுமையான...

வழக்குகள் தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை!

வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக் கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. ...

விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேறும் மஹிந்த – தங்காலையில் வரவேற்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பு – விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை வெளியேறவுள்ளார்...

யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை – சபையில் கருணாதிலக!

“பல்வேறு காரணிகளால் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள்குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது....