Home தாயகச் செய்திகள் மன்னாரில் சிறுமி வன்புணர்வு சகோதரர்களுக்கு 7 வருட சிறை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மன்னாரில் சிறுமி வன்புணர்வு சகோதரர்களுக்கு 7 வருட சிறை!

Share
Share

சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை – அதற்கு உதவியமைக்காக சகோதரர்கள் இருவருக்கு 7 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்தது மன்னார் மேல் நீதிமன்றம்.

குற்றத்தின் பாரதூரதன்மை, பாதிக்கப்பட சிறுமியின் நிலை, மேலும் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்கு அமைவாகவே இந்தத்
தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன், குற்றவாளிகள் சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாயை நட்டஈடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை வன்புணர்ந்த சகோதரருக்கும் இதற்காக அவருக்கு உதவிய சகோதரருக்குமே 7 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது. வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன், சிவஸ்கந்தசிறீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தியிருந்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...